Mar 20, 2011

பிரார்த்தனை

அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை தனது தோழர் ஒருவரை நலம் விசாரிக்கச்சென்றார்கள், அவர் மிகவும் மெலிந்து துரும்பைப்போன்று காணப்பட்டார். அவரதுஇந்த நிலையைக் கண்டு வியந்த நபியவர்கள் அந்த தோழரை நோக்கி 'தோழரே!அல்லாஹ்விடம் ஏதாவது துஆ (பிரார்த்தனை)ச்செய்தீர்களா?'என வினவினார்கள்.அதற்கு அந்தமனிதர்"ஆம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!யாஅல்லாஹ்! எனது பாவங்களுக்காக மறு உலகில் ஏதாவது தண்டனை வழங்குவதாக இருந்தால் அதை இங்கேயே கொடுத்துவிடு!என்று கேட்டேன்"எனக்கூறினார்.இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்" “ஸுப்ஹானல்லாஹ்” அவ்வாறு அல்லாஹ் தண்டனைக் கொடுக்க நாடினால் உங்களால் அதனை எவ்வாறு தாங்க முடியும்? எனவே தாங்கள் துஆ(பிரார்த்தனை)கேட்ப்பதாக இருந்தால் பின்வருமாறு பிரார்த்தியுங்கள்!"அல்லாஹும்ம ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தவ் வஃபில் ஆஃகிரத்தி ஹஸனத்தவ் வகினா அதாபன்னார்"(பொருள்:யா அல்லாஹ்!எங்களுக்கு இம்மையிலும் நன்மையளிப்பாயாக!மறுமையிலும் நன்மையளிப்பாயாக!எங்களை நரக வேதனையை விட்டும் காத்தருள்வாயாக!.நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சொற்படி அந்த மனிதர் வழமையாக ஓதிவந்தார், எனவே சில நாட்களில் நல்ல சுகம் பெற்றார்.[ஆதாரம்:முஸ்லிம்,நஸாயி,திர்மிதி.]