Dec 23, 2012

சிறந்த பொக்கிஷம்.


மனிதர்கள் தங்கம் வெள்ளியை சேர்த்து வைத்திருந்தால் நீங்களும் பின்வரும் வார்த்தைகளை பொக்கிஷங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்!
அவை:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ ، وأَلَعَزِيمَةَعلي الرُّشْدِ 
 وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ ، وَحُسْنَ عِبَادَتِكَ ، وَأَسْأَلُكَ َقَلْبًا سَلِيمًا ولِسَانًا صَادِقًا ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ وَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
யா அல்லாஹ்!எல்லா காரியங்களிலும் குழப்பமில்லாத உறுதியையும்,நேர்வழியின் மீது பிடிப்பையும் உன்னிடம் வேண்டுகிறேன்,உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் தன்மையையும்,உன்னை அழகிய முறையில் வணங்கும் நற்பாக்கியத்தையும் உன்னிடம் வேண்டுகிறேன்,நல்ல[எண்ணமுடைய]உள்ளத்தையும்,உண்மைமையான நாவையும் உன்னிடம் கேட்கிறேன்,மேலும் நீ எதை நல்லதென்று நினைக்கிறாயோ அதை உன்னிடம் தேடுகிறேன்,நீ எதை தீமை எனக்கருதுகிறாயோ அதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்,[எனது பட்டியலில் எதை பாவமாக]நீ அறிந்துள்ளவற்றிலிருந்தும் பாவமன்னிப்பு தேடுகிறேன்,மேலும் நீ மறைவானவற்றை மிக நன்கு அறிந்தவனாக இருக்கிறாய்.

Dec 17, 2012

உலகம் அழியப்போகிறதாம்,அப்படியா?


சிறிய அடையாளங்கள்
அமானிதங்கள் தன் இலாபப் பொருளாக கருதப்படும்,
ஜகாத் [ஏழை வரி]கடனாக நினைக்கப்படும்,

மகளின் தயவில் தாய் வாழுதல்.
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல் 
குடிசைகள் கோபுரமாகும்
மது பல பெயர் சொல்லி அழைக்கப் படும்,
விபச்சாரமும்  மதுப்பழக்கமும் பெருகும்   
தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.  
பாலை வனம் சோலை வனமாகும்.
காலம் சுருங்குதல்
கொலைகள் பெருகுதல்
நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல்  
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
பள்ளிகளில் கூச்சல்கள் அதிகமாகுதல்.
நெருக்கமான கடை வீதிகள் உண்டாகி விடுதல்.
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருத்தல்.
உயிரற்ற பொருட்கள் பேசுதல்
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்.
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்.
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்.
சாவதற்கு ஆசைப்படுதல்.
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் உருவாக்கி விடுதல்.
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல் 
பின்னவர்கள் முன்னவர்களை ஏசுதல்.
பெற்றோரை ஒதுக்கி,நண்பர்களை சேர்த்துக் கொள்வது,
ஆடல் அழகிகள் அதிகமாகுதல்.
இசை பெருகி விடுதல்,இன்னும் பல அடையாளங்கள் சிறியவை அனைத்தும் அநேகமாக நிகழ்ந்து விட்டன,
மேலும் பெரிய அடையாளங்கள் பல உள்ளன அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு சொள்ளப்படுக்றது,அவை:
தஜ்ஜாலின் வருகை
தஜ்ஜாலின் வருகை பற்றி எல்லா இறைதூதர்களும் எச்சரித்துள்ளனர்.  அவன் ஒற்றைக்கண்ணன்.உங்களின் இறைவன் ஒற்றக்கண்ணன் அல்லன்.அவனது இரு கண்களுக்கிடையேகாஃபிர்-இறைமறுப்பாளன்என எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,தஜ்ஜாலின் ஒரு கண் திராட்சைபோன்று சுருங்கி இருக்கும்,அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான்.அவன் உடல் கவர்ச்சியாக இருக்கும்.
சற்று குண்டாக இருப்பான், பின்புறத்திலிருந்து நோக்கினால் அவனது தலைமுடி சுரு் சுருளாக இருக்கும்,பரந்த நெற்றியுடையவனாக இருப்பான். குள்ளமானவனாகவும், கால்கள் இடைவெளி அதிகமுள்ளவனாகவும் இருப்பான்.
அவனின் ஒரு கண் ஊனம்.மறுகண் பச்சை நிறக்கல் போலிருக்கும் என்பது தான் அவனது தோற்றத்தில் வித்தியாசமானவை ஆகும். இவையே தஜ்ஜால் பற்றிய சரியான அறிமுகம் ஆகும். இவை தவிர அவன் பற்றி கற்பனையாகக் கூறப்படுபவை யாவும் பொய்யான தகவல்கள் ஆகும்.
தஜ்ஜால் எல்லா ஊர்களுக்கும் சென்று தனது மாயா ஜாலங்களால் மக்களை வழிகெடுப்பான்.
அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான்.அனைத்து இடற்களுக்கும் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளி வாசல்,தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவாசல்களையும் அவனால் நெருங்க முடியாது.
தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து தங்களையும் காப்பாற்றி, ஈமானையும் பாதுகாத்திட நபி(ஸல்) இரு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.   
அவன் சிரியா செல்லும் வழியில் நபி ஈஸா(அலை) அவர்களால் கொல்லப்படுவான். அதன் பின் ஈஸா(அலை) அவர்கள் இந்த பூமியில் நாற்பது ஆண்டுகள் நேர்மையான தலைவராக இருந்து மக்களை வழிநடத்துவார்கள் என நபி (ஜல்) அவர்கள் கூறினார்கள்.
ஈஸா[அலைஹிஸ்ஸலாம்]வருகை.
ஈஸா[அலை]அவர்கள் கியாமத் நாளின் அடையாளமாக திகழ்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்கியுள்ளனர்.
    'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்பது நபிமொழி.
போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்'அவர் இறங்கக் கூடிய காலத்தில் இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்'
    தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.
    தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா(கோபுரம்)வுக்கருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தன் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் சொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வையில் எட்டும் தூரம் வரை செல்லும். மூச்சுக் காற்று படுகின்ற எந்தக் காபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள,
    ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்து விடும் எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.
யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.                                                                   
யஃஜூஜ் மஃஜூஜ்.
உலகம் அழியக்கூடிய காலம் நெருங்கும் போது ஏற்படும் பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதி
ல்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.


அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரயிலான வசனங்கள் கூறுகின்றன.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை.உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் இக்கூட்டத்தினால் முற்றுகையிடப்படுவார்கள்.
உலகையே கைப்பற்றி விட்டோம் என்ற மமதையில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறு வார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான்,இதை பார்த்து அவர்கள் வானையும் பிடித்து விட்டோம் துள்ளி குதிப்பார்கள்.
ஈஸா[அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஸ்லிம்களோடு தூர்சீனா மழையில் இருப்பார்கள் அங்கு இவர்கள் செல்ல முடியாது,, அன்று ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறி நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

"
பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு''என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் ஒரு கூட்டம் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள்.அல்லாஹ் என்று சொல்பவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள், அப்போதுதான் சூரியன் மேற்கில் உதயமாகும் அதன் பிறகு ஈமான் கொள்பவர்களின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது
என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.