Aug 23, 2010
3-வது நாள்[கடன்
Aug 20, 2010
Aug 18, 2010
2-வது நாள்[இறையச்சம்] அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே!உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டிருந்ததைப் போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.[அதனால்] நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.(2:183)
அன்பானவர்களே! மனிதனின் வாழ்வு பல சூழ் நிலைகளால் சூழப்பட்டுள்ளது. தவறுகளை விட்டும் தவிர்ந்து கொள்வது என்பது மிகவும் சிரமான ஒன்றாகவே உள்ளது, இதற்கெல்லாம் காரணம்;இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு சோதனையாக படைத்துள்ளான், அந்த சோதனைகளை சிலவற்றின்மூலம் அவன் உண்டாக்கியுள்ளான்.
மனமயக்கத்திற்கு காரணம் நான்கு பேர். ஆம்! நாம் அல்லாஹ்வை பயந்து வாழ வேண்டும் என்று என்னதான் முயன்றாலும், சில சந்தர்ப்பங்கள் நம்மையும் மிகைத்து நிலைத்தடுமாறச்செய்து விடுகின்றன. அந்த சந்தர்ப்பங்களின் கார்ணகர்த்தாக்கள் நான்குபேர் எனலாம். 1) உலக ஆசைகள், 2)குடும்ப பாசங்கள், 3) ஷைத்தான்[என்ற நமது விரோதி], 4)நமது உள்ளம்[மனோ இச்சை], இவற்றில் நமக்கு மிகவும் ஆபத்தானது நமது உள்ளம்தான்,காரணம்; இன் நான்கில் நமது உள்ளத்தைத்தவிர மற்ற மூன்றும் நம்மைவிட்டும் தனியாக உள்ளன,ஆனால் நமது உள்ளம் மட்டுமே நம்கூடவே இருந்து குழி பறிக்கின்றது. எனவேதான் யூஸுஃப்[அலை] அவர்களின் வார்த்தைகளை அல்லாஹ் தனது அருள்மறை குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்:அன்றி "நான்(தவறுகளிலிருந்து)பரிசுத்தமானவன்"என்று என்னைப்பற்றி நான் கூறவில்லை,ஏனென்றால் நிச்சயமாக என் இறைவன் அருள் புரிந்தாலன்றி(மனிதனின்)மனம் பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது.(12:53).. நம்மைவிட்டும் நீக்கப்பட முடியாத நம் இதயத்தின் தீங்கை விட்டும் தப்பிக்கவேண்டுமென்றால்;அந்த இச்சையை நம் சொல்லைக் கேட்கும் வகையில் பயிற்சி செய்து பழக்கப்படுத்தவேண்டும். அந்த பயிற்சியின் பலன் தான்"தக்வா"இறையச்சமாகும். இந்த இறையச்சம் என்ற கேடயத்தின் மூலம் மனோ இச்சையின் தீங்குகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொண்டால் மறுமையில் இன்பமே இன்பம்தான்.இதையே அல்லாஹ் ,எவர் தன் இறைவனின் சன்னிதியில்(விசாரணைக்காக)நிற்பதைப்(பற்றி)பயந்து (தனது தவறான)மனோ இச்சையை விட்டும் தன்னை தடுத்துக்கொண்டாரோ,அவர் செல்லுமிடம் சுவனம்தான்.(79:40,41)
இறையருள் இன்றி முடியாது.
தோழர்களே! இந்த இறையச்சம் என்ற பாதுகாப்பு அரண் நம் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும் மட்டும் முடியக்கூடிய ஒன்றல்ல;இவற்றுக்கும் மேலாக இறையருள் தேவை,நாம் செய்யும் முயற்சிக்கும் அந்த இறையருள் அவசியம். எனவே இந்த "தக்வா"இறையச்சத்தை அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அன்னை ஆயிஷா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஒரு முறை நபியவர்களை எனது வீட்டில் தேடினேன்,காண முடியவில்லை,கதவைத்திறந்து பள்ளிவாசலில் பார்த்தேன்,அங்கு அன்னார் பூமியில் தலைவைத்து "ஸஜ்தா" செய்த நிலையில் "அல்லாஹும்ம ஆத்தி நஃப்ஸீ தக்வாஹா,வஜக்கிஹா அந்த ஃகைரு மன் ஜக்காஹா,அந்த வலிய்யுஹா வமவ்லாஹா".(அல்லாஹ்வே!எனது உள்ளத்திற்கு (உனது)பயபக்தியைத் தருவயாக!,அதனை பரிசுத்தப் படுத்துவாயாக!,நீதான் அதன் உதவியாளனும்,மற்றும் தலைவனுமாவாய்!என்று துஆ(பிரார்த்தனைச்செய்து கொண்டிருந்தார்கள்.அத்தகைய பயபக்தியை,அல்லாஹ் நமக்கும் தந்தருள்புரிவானாக!ஆமீன்
Aug 17, 2010
நம்மிடம் வருகைத் தந்துள்ள இம்மாதம்,மகிழ்ச்சியின் மாதம் மட்டுமல்ல; இது பயிற்சியின் மாதமும்கூட. ஆம்!இம்மாதம் வருகைத் தந்தவுடன் பலபேர், தொழுகையாளியாக,குர்'ஆன் ஓதக்கூடியவர்களாக, தர்மம் செய்யக்கூடியவர்களாக, நன்மைகளில் நாட்டமுடையவர்களாக ,மாறிவிடுவதைக்காணுகிறோம்.
இந்த மாற்றங்களை அல்லாஹ்,இந்த மாதத்துக்குரிய பிரயோஜனமாக ஆக்கியுள்ளான். குறிப்பாக இந்த மாதத்தில் பல மஸ்ஜிதுகளில் தராவீஹ் தொழுகைக்கான ஏற்பாட்டில்,குர்'ஆன் முழுவதையும் ஓதி தொழுக வைப்பதோடு,அவற்றிற்கான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளையும் உண்டாக்கியுள்ளார்கள்;என்பது மிகவும் மகிழ்ச்சியான்ஒன்றாகும்[அல்ஹம்து லில்லாஹ்].
தினம் ஒரு திருவசனம். அடியேன் பணி செய்யும் "சிங்கை பென் கூலன்" பள்ளிவாசலில் தினமும் தராவீஹ் இருபது ரக்க அத்துகள் தொழுக வைத்து ,அதில் தினமும் ஒரு[பாகம்], ஜுஸ்வு என்ற விகிதப்படி,முப்பது நாட்களுக்கு முப்பது ஜுஸ்வுகள்,முடிக்கப்படுகின்றன, அத்துடன்,அன்றைக்கு ஓதப்பட்டவைகளில் ஒருவசனத்தை எடுத்து அதன் விளக்கத்தையும் சொல்லுகின்ற பாக்கியத்தை எனக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான்,[எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே].
அவ்வாறு கூறப்பட்ட விளக்கங்களை இந்த தளத்திலும் பதிவு செய்து தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் 1-வது நாள்[ஈமான்,விசுவாசம்]
அல்லாஹ் கூறுகிறான்: அலிஃப் லாம் மீம்,இதுதான் வேத நூல்,இதில் சந்தேகமில்லை,இறையச்சம் உடையவர்களுக்கு[இது]நேரான வழியைக் காட்டும்,அவர்கள் மறைவானவற்றை[உண்டென்று]நம்பிக்கை கொள்வார்கள்,தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள்,நாம் அவர்களுக்கு வழங்கியுள்ள[பொருள் செல்வம் போன்ற]வற்றிலிருந்து [தானமாக]செலவும் செய்வார்கள்.[அன்றி நபியே!]உங்களுக்கு இறக்கப்பட்ட இ[வ்வேதத்]தையும்,உங்களுக்கு முன்[பிருந்த நபிமார்களுக்கு]இறக்கப்பட்ட[வேதங்கள் யா]வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள்,[நியாயத் தீர்ப்பு நாளாகிய]இறுதி நாளையும் [உண்மை என்று]உறுதியாக நம்புவார்கள்.இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரன வழியில் இருக்கிறார்கள், இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள்.{2:1,2,3,4,5.} ஒரு முறை நபி[ஸல்]அவர்களிடம் ஜிப்ரீல்[அலை]அவர்கள் வருகைத்தந்த போது,அன்னாரிடத்தில் நபியவர்கள்,பல கேள்விகளைக் கேட்டார்கள்,அவற்றில் ஒன்று;ஈமான்[விசுவாசம் கொள்ளுதல்]என்றால் என்ன?"என்பதாகும். அதற்கு ஜிப்ரீல்[அலை]அவர்கள் பதில் கூறினார்கள்:ஈமான் என்பது,அல்லாஹ்வையும்,அவனுடைய மலக்கு[வானவர்]களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும்,மறுமை நாளையும்,நன்மைத்தீமை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நடைபெறும் என்பதையும்,மனப்பூர்வமாக நம்பி விசுவாசம் கொள்வதாகும். ஒரு முஸ்லிமின் உள்ளத்துக்குள் ஆணி வேர்களாக இருக்க் வேண்டிய அடிப்படை கொள்கைகள் இவை. இந்த நம்பிக்கைகளில் ஒன்றில் சந்தேகம் என்றாலும்,அவனை விசுவாசி[முஃமின்]என்று கூறுவது முடியாததாகும். இந்த நம்பிக்கைகளுடன் நற்செயல்களும் இணைந்திருப்பதும் அவசியமாகும்,அவை;1)வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மத்[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவர்கள்,என்று நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதி கொள்வதாகும்,2)தினமும் ஐந்து நேரம் தொழுவது,3)ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது,4)தனது பொருள்களைக் கணக்கிட்டு ஜகாத்[ஏழை வரி]கொடுப்பது,5)வசதியுடையவர்கள் ஹஜ் என்ற கடமையை நிறை வேற்றுவது. இவை யாவும் உண்மை விசுவாசியின் இலக்கணமாகும்.இந்த நம்பிக்கையும் விசுவாசமும், சில தன்மைகளை விசுவாசியின் இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்,அதுதான் அவனது பூரண நம்பிக்கையின் வெளிப்பாடாகும். எல்லாம் அவனுக்காக, நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:"ஒருவர் கொள்கின்ற விருப்பும்,வெறுப்பும்,அவர் அடுத்தவருக்கு கொடுப்பதும், கொடுக்காமல் தவிர்த்துக் கொள்வதும்,[ஆக அனைத்தும்]அல்லாஹ்வுக்காக என்று ஆகி விட்டால்,அவரது ஈமான் பூரணத்துவம் பெற்றுவிட்டது,"[நூல்:முஸ்லிம்]ஈமானின் இனிமை. மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்;1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது.3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி] நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்:யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்
ஈமான்
ஒரு முறை நபி[ஸல்]அவர்களிடம் ஜிப்ரீல்[அலை]அவர்கள் வருகைத்தந்த போது,அன்னாரிடத்தில் நபியவர்கள்,பல கேள்விகளைக் கேட்டார்கள்,அவற்றில் ஒன்று;ஈமான்[விசுவாசம் கொள்ளுதல்]என்றால் என்ன?"என்பதாகும். அதற்கு ஜிப்ரீல்[அலை]அவர்கள் பதில் கூறினார்கள்:ஈமான் என்பது,அல்லாஹ்வையும்,அவனுடைய மலக்கு[வானவர்]களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும்,மறுமை நாளையும்,நன்மைத்தீமை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நடைபெறும் என்பதையும்,மனப்பூர்வமாக நம்பி விசுவாசம் கொள்வதாகும். ஒரு முஸ்லிமின் உள்ளத்துக்குள் ஆணி வேர்களாக இருக்க் வேண்டிய அடிப்படை கொள்கைகள் இவை. இந்த நம்பிக்கைகளில் ஒன்றில் சந்தேகம் என்றாலும்,அவனை விசுவாசி[முஃமின்]என்று கூறுவது முடியாததாகும். இந்த நம்பிக்கைகளுடன் நற்செயல்களும் இணைந்திருப்பதும் அவசியமாகும்,அவை;1)வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மத்[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவர்கள்,என்று நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதி கொள்வதாகும்,2)தினமும் ஐந்து நேரம் தொழுவது,3)ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது,4)தனது பொருள்களைக் கணக்கிட்டு ஜகாத்[ஏழை வரி]கொடுப்பது,5)வசதியுடையவர்கள் ஹஜ் என்ற கடமையை நிறை வேற்றுவது. இவை யாவும் உண்மை விசுவாசியின் இலக்கணமாகும்.இந்த நம்பிக்கையும் விசுவாசமும், சில தன்மைகளை விசுவாசியின் இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்,அதுதான் அவனது பூரண நம்பிக்கையின் வெளிப்பாடாகும். எல்லாம் அவனுக்காக, நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:"ஒருவர் கொள்கின்ற விருப்பும்,வெறுப்பும்,அவர் அடுத்தவருக்கு கொடுப்பதும், கொடுக்காமல் தவிர்த்துக் கொள்வதும்,[ஆக அனைத்தும்]அல்லாஹ்வுக்காக என்று ஆகி விட்டால்,அவரது ஈமான் பூரணத்துவம் பெற்றுவிட்டது,"[நூல்:முஸ்லிம்ஈமானின் இனிமை. மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்;1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது.3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி] நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்:யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்
ஈமானின் இனிமை
மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்; 1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது. 3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி]
நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்: யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்
Aug 6, 2010
ரமளானே!வருக!!
Aug 1, 2010
கருணை உள்ளங்கள்
Jul 31, 2010
சமூக நல்லிணக்கம்[3
Jul 28, 2010
சமூக நல்லிணக்கம்[2]
Jul 27, 2010
சமூக நல்லிணக்கம்.[1]
வைத்துக்கொண்டுள்ளது. இஸ்லாம் என்ற இந்த மார்க்கத்தை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் உலகில் எடுத்துச்சொல்ல ஆரம்பித்த போது மிகப்பெரிய எதிர்ப்புகளும் சோதனைகளும் சூராவலியாய் வீசின .என்னதான் எதிற்புகள் வந்தாலும் சொல்லப்பட்ட கருத்துகளும் அவற்றுள் பொதிந்திருந்த சமத்துவ நீதிகளும் பின் தங்கிய மக்களையும் விடுதலைக்காக ஏங்கிய வறியவர்களையும் இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டுவந்து இணைய வைத்தன. பின் தங்கிய மக்களின் மறுமலர்ச்சிக்காக பாடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் தட்டு மக்களின் எதிர்ப்பை சம்பாதிதுக்கொள்ளவேண்டும் என்பது தெரிந்த ஒன்றுதான், அவ்வாறே நபிகள் நாயகம்[ஸல்]அவர்களுக்கு அந்த மக்கள் பலமான எதிர்ப்பைக்காட்டினாலும் அந்த மக்களின் உள்ளங்களில் நபியின் மரியாதை நிரைந்தே இருந்தன, "அஸ்ஸாதிq" [உண்மையாளர்] "அல் அமீன்"[நம்பிக்கையாளர்]என்ற நபியைப்பற்றிய நற்குணத்திரு நாமங்கள் aவர்களின் பாறைப்போன்ற இதயங்களில் கல்வெட்டுக்களாக பதிந்திருந்தன.காரணம் அன்றைய மக்களிடம் அன்னார் ஏற்றத்தாழ்வின்றி பாகுபாடின்றி அன்போடும் கருணையோடும் நெறியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டார்கள்,அதேசமயம் அவர்களின் முரண்பாடன கொள்கைகளுக்கு ஒத்துப்போகக்கூடியவர்களாகவும் இருக்கவில்லை. சுருங்கச்சொன்னால் உயிரை நேசித்தார்கள் ஊடல்களை நேசிக்கவில்லை மனிதனை நேசித்தார்கள் சொந்த மாசுகளையும் மாயைகளையும் நேசிக்கவில்லை. மேலும் அவர்களுக்குள் ஊடுருவிப்போயிருந்த பாழாய்ப் போன பழக்க வழக்கங்களைக் கண்டு வருந்தினார்கள், அவற்றைக் களைவது எப்படியென்று கவலைப்பட்டார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். இன வெறியும்,மொழி வெறியும் மிகுந்த அன்றைய அரபு மக்களின் உள்ளத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரு குடும்பம்,ஒரு சமூகம் என்ற மகத்தான மனித நேயத்தை பதிய வைத்தார்கள். அருள் மறை குர் ஆனின் வசனமாகிய"மனிதர்களே!உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண்,ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம்.பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்,(அதனை வைத்து பெருமையடித்துக் கொள்வதற்காக அல்ல)"[49:13]என்ற வசனத்தின் விளக்கமாகவும் முன்மாதிரியாகவும் வாழ்ந்தார்கள் சிறுவராய் இருந்த ஃஜைத் என்பவர் மக்கவின் கடைத்தெருவில் வைத்து அடிமையாக விற்பனைச்செய்யப்பட்டார்,அவரைவிலைகொடுத்து வாங்கிய முஹம்மத் [ஸல்] அவர்களின் அருமை மனைவி கதீஜா அம்மையார் அவர்கள் அவரை தனது கணவருக்கு அன்பளிப்பு செய்து இவரை பணிவிடைக்காக வைத்துக்கொள்ளுங்கள்,எனக்கூறினார்கள். அந்த ஜைத் மக்கவின் உயர் குடும்பாகிய குரைஷி கூட்டத்தைச்சார்ந்த்தவரும் அல்லர்,அல்லது அந்த ஊரைச்சார்ந்தவரும் அல்லர், அப்படியிருந்தும் நபியவர்கள் அவரிடம் வேற்பாடு எதுவும் காட்டாமல் தன் சொந்த் பிள்ளையைப்போன்று அரவணைத்துக்கொண்டதால் அவர் நபியை தனது பெற்றோரை விட நேசித்தார். சில வருடங்களுக்குப்பிறகு அவருடைய பெற்றோர் இவர் இருக்கும் இடத்தைக்கேள்விப்பட்டு ஆவலோடு வந்து அள்ளி அணைத்துக்கொண்டு ஆனந்தமடைந்தார்கள். அதன் பிறகு அண்ணலார் நபி [ஸல்] அவர்களிடம் சென்று எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம், எங்கள் மகனை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறிய போது,நற்குண நாயகம்[ஸல்] அவர்கள் கூறினார்கள்:இவர் உங்களுடைய மகன், உங்களுக்கு சொந்தமானவர், அவரும் நீங்களும் விரும்பினால் தாராளமாக அழைத்துப்போகலாம், அதற்காக எனக்கு எந்த தொகையும் தேவையில்லை. ஜைதின் பெற்றோர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை, பிரச்சினை இவ்வளவு இலகுவாக முடியுமென்று நினைக்கவேயில்லை,தங்களின் செல்ல மகன் ஜைதிடம் சென்றார்கள், மகனே! உன்னை அழைத்துச்செல்ல முஹம்மதிடம் அனுமதி பெற்று விட்டோம்;எனவே உடனே புறப்படு; நம் பந்தங்கள் உன்னைப்பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள், என்று கூறினார்கள். இதனைக்கேட்ட மகன் ஜைத், "எனதருமைப்பெற்றோர்களே!தங்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி; ஆனால் நான் தங்களோடு வரமுடியாது;காரணம் எனது நேசர் நபி [ஸல்] அவர்களை விட்டு விட்டு ஒரு போதும் என்னால் இருக்கமுடியாது,"என்று கூறினார். அவரது இந்த பதில் நபியின் அன்பான அணுகு முறையை அடையாளப்படுத்துகிறது .நல்லிணக்கம் தொடரும்...
Jul 22, 2010
சந்தேகம் மற்றும் புறம்
Jul 21, 2010
Jul 20, 2010
குறை கூறவேண்டாம்
அல்லாஹ் கூறுகிறான்:நம்பிக்கையாளர்களே!எந்த ஆண்களும் மற்ற எந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம்,அவர்கள்[அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும் ]இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.அவ்வாறே எந்த பெண்களும் மற்ற எந்த பெண்களையும்[பரிகாசம் செய்ய வேண்டாம்]அவர்கள் [பரிகாசம் செய்யும்]இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.உங்களில் ஒருவர் மற்ற எவரையும் இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம்,உங்களில் ஒருவர் மற்றவருக்கு[த்தீய]பட்டப்பெயர் சூட்ட வேண்டாம்,நம்பிக்கைக் கொண்டதன் பின்னர்,கெட்டப்பெயர் சூட்டுவது மகா கெட்ட பாவமாகும்.எவர்கள் [இவைகளிலிருந்து]விலகிக்கொள்ளவில்லையோ அவர்கள்தான் [வரம்பு மீறிய]அநியாயக்காரர்கள்.அல் குர்,ஆன்:49:11.
பொறாமை
¿À¢[…ø]«Å÷¸û «ÕǢɡ÷¸û:±îº¡¢ì¨¸ ¦À¡È¡¨Áì ÌÉò¾¢Ä¢ÕóÐ ¯í¸¨Çô À¡Ð¸¡òÐ즸¡ûÙí¸û!¦¿ÕôÒ Å¢È¨¸ ±¡¢òÐõÀġ츢 Å¢ÎŨ¾ô §À¡Ä þó¾ ¦À¡È¡¨Á ¯í¸û ¿ü¦ºÂø¸¨Çô À¡Æ¡ì¸¢ Ţθ¢ÈÐ. áø:«â¾¡çò.

