Aug 1, 2010

கருணை உள்ளங்கள்

மனிதனாய் பிறந்தால் மட்டும் போதாது, மனித தன்மைகளோடு வாழ்ந்தோமா? என்பதுதான் வ்முக்கியம்காரணம் இதையே அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர் பார்க்கின்றான். அல்லாஹ்,தனது தூதர் நபி[ஸல்] அவர்களின் அழகிய அழைப்புப் பணியின் வெற்றிக் குறித்து கூறுகின்றான்"நபியே! அல்லாஹ்வின் அருளின் காரணமகவே நீங்கள் அவர்களிடத்தில் மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நடந்து கொண்டிருப்பீரானால்,உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்". நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அருளினார்கள்:"பூமியிலுள்ளவர்களின் மீது நீங்கள் கருணையோடு நடந்து கொள்ளுங்கள்!, வானிலுள்ள[அல்லாஹ்வான]வன் உங்களின் மீது கருணை புரிவான்