Jul 20, 2010

குறை கூறவேண்டாம்

அல்லாஹ் கூறுகிறான்:நம்பிக்கையாளர்களே!எந்த ஆண்களும் மற்ற எந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம்,அவர்கள்[அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும் ]இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.அவ்வாறே எந்த பெண்களும் மற்ற எந்த பெண்களையும்[பரிகாசம் செய்ய வேண்டாம்]அவர்கள் [பரிகாசம் செய்யும்]இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.உங்களில் ஒருவர் மற்ற எவரையும் இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம்,உங்களில் ஒருவர் மற்றவருக்கு[த்தீய]பட்டப்பெயர் சூட்ட வேண்டாம்,நம்பிக்கைக் கொண்டதன் பின்னர்,கெட்டப்பெயர் சூட்டுவது மகா கெட்ட பாவமாகும்.எவர்கள் [இவைகளிலிருந்து]விலகிக்கொள்ளவில்லையோ அவர்கள்தான் [வரம்பு மீறிய]அநியாயக்காரர்கள்.அல் குர்,ஆன்:49:11.

பொறாமை

¿À¢[…ø]«Å÷¸û «ÕǢɡ÷¸û:±îº¡¢ì¨¸ ¦À¡È¡¨Áì ÌÉò¾¢Ä¢ÕóÐ ¯í¸¨Çô À¡Ð¸¡òÐ즸¡ûÙí¸û!¦¿ÕôÒ Å¢È¨¸ ±¡¢òÐõÀġ츢 Å¢ÎŨ¾ô §À¡Ä þó¾ ¦À¡È¡¨Á ¯í¸û ¿ü¦ºÂø¸¨Çô À¡Æ¡ì¸¢ Ţθ¢ÈÐ. áø:«â¾¡çò.


நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்:எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒப்பாகும்,ஒரு மனிதர் தீ மூட்டினார் அதன் ஒளியைக் கண்ட விட்டில் பூச்சுக்களும் மற்ற பூச்சுக்களும் அந்த தீயில் வந்து விழ வந்தன, அந்த மனிதர் அவற்றைத் தீயில் விழாதவாறு தடுத்துக்கொண்டிருந்தார், ஆனால் அவை அத்தடையையும் மீறி அத் தீயில் விழுகின்றன, இதைப் போலத்தான் [பாவங்களைப்புரிந்து]நரக நெருப்பில் விழாமல் உங்களைத்தடுக்க உங்கள் இடுப்புகளைப் பிடித்து இழுத்து நான் தடுக்கின்றேன், ஆனால் நீங்கள் என் தடையையும் மீறி அந்த நரகில் விழ முயல்கிறீர்கள்.நூல்:புகாரி.