Jan 22, 2011

பாதுகாப்புவேண்டுமா?

அப்போதுதான் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களும் அன்னாரது மக்கா நகரதோழர்களும் மதீனா வந்து ஆகவேண்டிய ஒவ்வொரு வேலையையும் கொஞ்சம் கொஞ்சமாக முடித்து கொண்டிருக்கிறார்கள்,இன் நிலையில் ஒரு பக்கம் மக்கா காபிஃர்கள்" நம்மை எதிர்த்துக்கொண்டு ஊரை விட்டும் சென்ற முஸ்லிம்கள் மதீனாவில் நிம்மதியாக இருந்து விடக்கூடாது என்று" பல சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்க,மறுபக்கம் மதீனாவில் இருந்த இணை வைப்பாளர்களும்,யூதர்களும் நபியின் வருகையால் பல இலாபங்களை இழந்த பொறாமையால் வெந்து போய் முஸ்லிம்களுக்கு எதிராக ப்ல திட்டங்களைத் தீட்டியவர்களாக இருந்தனர்,ஆக நபியவர்களுக்கு எதிராக நாலாபுறங்களிலும் கொலை முயற்சிகள் நடை பெற்று வந்தன.இந்த சூழ் நிலையில்தான் ஒரு முறை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் தோழர்களை நோக்கி "இன்று இரவு எனது தோழர்களில் யாராவது எனக்கு காவல் நின்றால் நன்றாக இருக்கும்" எனக் கூறினார்கள். அன்று இரவு [எங்களின் வீட்டுக்கு வெளியில்] ஆயுதங்களின் சப்தத்தை நான்கள் கேட்டோம்.யாரது? என நபியவர்கள் கேட்ட போது,"நான் ஸஃது இப்னு அபீ வக்காஸ் வந்திருக்கிறேன்,தங்களுக்காக காவல் நிற்க வந்துள்ளேன்,என்று குரல் வந்தது.அன்று இரவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிம்மதியாக தூங்கினார்கள் எந்தளவுக்கெனில் அன்னாரது குரட்டை சப்தத்தை நான் கேட்டேன்,.என அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன் ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.இவ்வாறாக நபியவர்களுக்காக காவல் நின்றவர்கள் ஸஃது ரழியல்லாஹுஅன் ஹு அவர்களைப்போல மற்ற சில நபித்தோழர்களும் இருந்தார்கள்,அவர்களில் சிலர் உப்பாது இப்னுல் பிஷ்ரு,ஜுபைருப்னுல் அவாம், ஸஃதுப்னு முஆத்,ஆகிய இவர்களும்,இன்னும் சில நபித்தோழர்களும்[ரழியல்லாஹுஅன் ஹும்]காவல் முறை வைத்து காவல் காத்து வந்தனர்.அல்லாஹ் எப்போதும் தனது சேவையைக் குறிக்கோளாகக் கொண்டவர்களை இவ்வாறு அச்சத்திலேயே விட்டு விட மாட்டான் என்ற பொது நியதிக்கு ஏற்ப வசனம் ஒன்றை தனது தூதருக்கு அருளினான்:தூதரே! உமது இரட்சகன் உமக்கு இறக்கியருளியவற்றை எத்தி வையுங்கள்;மேலும் அல்லாஹ் தங்களை மக்களின் தீமைகளிலிருந்து காத்தருள்வான்;.[மாயிதா:67].