Aug 17, 2010

மகிழ்ச்சியின்மாதம்

நம்மிடம் வருகைத் தந்துள்ள இம்மாதம்,மகிழ்ச்சியின் மாதம் மட்டுமல்ல; இது பயிற்சியின் மாதமும்கூட. ஆம்!இம்மாதம் வருகைத் தந்தவுடன் பலபேர், தொழுகையாளியாக,குர்'ஆன் ஓதக்கூடியவர்களாக, தர்மம் செய்யக்கூடியவர்களாக, நன்மைகளில் நாட்டமுடையவர்களாக ,மாறிவிடுவதைக்காணுகிறோம்.

இந்த மாற்றங்களை அல்லாஹ்,இந்த மாதத்துக்குரிய பிரயோஜனமாக ஆக்கியுள்ளான். குறிப்பாக இந்த மாதத்தில் பல மஸ்ஜிதுகளில் தராவீஹ் தொழுகைக்கான ஏற்பாட்டில்,குர்'ஆன் முழுவதையும் ஓதி தொழுக வைப்பதோடு,அவற்றிற்கான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளையும் உண்டாக்கியுள்ளார்கள்;என்பது மிகவும் மகிழ்ச்சியான்ஒன்றாகும்[அல்ஹம்து லில்லாஹ்].

தினம் ஒரு திருவசனம். அடியேன் பணி செய்யும் "சிங்கை பென் கூலன்" பள்ளிவாசலில் தினமும் தராவீஹ் இருபது ரக்க அத்துகள் தொழுக வைத்து ,அதில் தினமும் ஒரு[பாகம்], ஜுஸ்வு என்ற விகிதப்படி,முப்பது நாட்களுக்கு முப்பது ஜுஸ்வுகள்,முடிக்கப்படுகின்றன, அத்துடன்,அன்றைக்கு ஓதப்பட்டவைகளில் ஒருவசனத்தை எடுத்து அதன் விளக்கத்தையும் சொல்லுகின்ற பாக்கியத்தை எனக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான்,[எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே].

அவ்வாறு கூறப்பட்ட விளக்கங்களை இந்த தளத்திலும் பதிவு செய்து தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் 1-வது நாள்[ஈமான்,விசுவாசம்]

அல்லாஹ் கூறுகிறான்: அலிஃப் லாம் மீம்,இதுதான் வேத நூல்,இதில் சந்தேகமில்லை,இறையச்சம் உடையவர்களுக்கு[இது]நேரான வழியைக் காட்டும்,அவர்கள் மறைவானவற்றை[உண்டென்று]நம்பிக்கை கொள்வார்கள்,தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள்,நாம் அவர்களுக்கு வழங்கியுள்ள[பொருள் செல்வம் போன்ற]வற்றிலிருந்து [தானமாக]செலவும் செய்வார்கள்.[அன்றி நபியே!]உங்களுக்கு இறக்கப்பட்ட இ[வ்வேதத்]தையும்,உங்களுக்கு முன்[பிருந்த நபிமார்களுக்கு]இறக்கப்பட்ட[வேதங்கள் யா]வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள்,[நியாயத் தீர்ப்பு நாளாகிய]இறுதி நாளையும் [உண்மை என்று]உறுதியாக நம்புவார்கள்.இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரன வழியில் இருக்கிறார்கள், இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள்.{2:1,2,3,4,5.} ஒரு முறை நபி[ஸல்]அவர்களிடம் ஜிப்ரீல்[அலை]அவர்கள் வருகைத்தந்த போது,அன்னாரிடத்தில் நபியவர்கள்,பல கேள்விகளைக் கேட்டார்கள்,அவற்றில் ஒன்று;ஈமான்[விசுவாசம் கொள்ளுதல்]என்றால் என்ன?"என்பதாகும். அதற்கு ஜிப்ரீல்[அலை]அவர்கள் பதில் கூறினார்கள்:ஈமான் என்பது,அல்லாஹ்வையும்,அவனுடைய மலக்கு[வானவர்]களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும்,மறுமை நாளையும்,நன்மைத்தீமை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நடைபெறும் என்பதையும்,மனப்பூர்வமாக நம்பி விசுவாசம் கொள்வதாகும். ஒரு முஸ்லிமின் உள்ளத்துக்குள் ஆணி வேர்களாக இருக்க் வேண்டிய அடிப்படை கொள்கைகள் இவை. இந்த நம்பிக்கைகளில் ஒன்றில் சந்தேகம் என்றாலும்,அவனை விசுவாசி[முஃமின்]என்று கூறுவது முடியாததாகும். இந்த நம்பிக்கைகளுடன் நற்செயல்களும் இணைந்திருப்பதும் அவசியமாகும்,அவை;1)வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மத்[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவர்கள்,என்று நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதி கொள்வதாகும்,2)தினமும் ஐந்து நேரம் தொழுவது,3)ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது,4)தனது பொருள்களைக் கணக்கிட்டு ஜகாத்[ஏழை வரி]கொடுப்பது,5)வசதியுடையவர்கள் ஹஜ் என்ற கடமையை நிறை வேற்றுவது. இவை யாவும் உண்மை விசுவாசியின் இலக்கணமாகும்.இந்த நம்பிக்கையும் விசுவாசமும், சில தன்மைகளை விசுவாசியின் இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்,அதுதான் அவனது பூரண நம்பிக்கையின் வெளிப்பாடாகும். எல்லாம் அவனுக்காக, நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:"ஒருவர் கொள்கின்ற விருப்பும்,வெறுப்பும்,அவர் அடுத்தவருக்கு கொடுப்பதும், கொடுக்காமல் தவிர்த்துக் கொள்வதும்,[ஆக அனைத்தும்]அல்லாஹ்வுக்காக என்று ஆகி விட்டால்,அவரது ஈமான் பூரணத்துவம் பெற்றுவிட்டது,"[நூல்:முஸ்லிம்]ஈமானின் இனிமை. மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்;1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது.3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி] நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்:யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்

No comments:

Post a Comment