Oct 20, 2012

நபியின் அன்பு.

அன்னை ஆயிஷா[ரழி]அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு முறை அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்ட நான் "அல்லாஹ்வின் தூதரே!எனக்காக அல்லாஹ்விடம் துஆச்செய்யுங்கள்"என வேண்டினேன்.உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

"யாஅல்லாஹ்!ஆயிஷாவின் முன் பின் பாவங்களையும் மான்னித்து விடுவாயாக! மேலும் அவர் மறைமுகமாக பகிரங்கமாகச்செய்த பாவங்களையும் மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள்.

இந்த துஆவைக் கேட்டதும் எனது தலை எனது மடியில் போய் முட்டும் அளவுக்கு எனக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று," 

இதனைக்கண்ட நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்]அவர்கள் "ஆயிஷா!எனது துஆவினால் இவ்வளவு மகிழ்ச்சியா?"என்று வினவினார்கள்.யாரஸூலல்லாஹ்!தங்களின் துஆவினால் நான் எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்?என நான் கூறினேன்.

அன்பு மயமான அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:
ஆயிஷா! அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த துஆவை எனது சமுதாயத்[உம்மத்]துக்காகஒவ்வொரு தொழுகையிலும் நான் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
                         ஆதாரம்:அல்பஸ்ஸார்,மஜ்மவுஸ்ஸவாயித்

No comments:

Post a Comment