Apr 3, 2014

நபி[ஸல்]அவர்களை பற்றிய கேள்வி பதில்கள்.

கேள்வி:கஃபா வை இடிக்க வந்த யானை படை நிகழ்ச்சிக்கு பின் நபியவர்கள் எப்போது பிறந்தார்கள்?
பதில்: ஐம்பது நாட்களுக்கு பின்.

 கேள்வி:நபி[ஸல்]அவர்களுடன் வானிபத்துக்காக சிரியா சென்ற அன்னை கதீஜா அவர்களின் அடிமையின் பெயர் என்ன? 
பதில்:மைஸரா என்பதாகும்.

 கேள்வி: நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? 
பதில்:ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள்.

 கேள்வி:நமது நபியவர்கள் எந்த நபியின் வழித்தோன்றலில் பிறந்தவர்கள்? 
பதில்:நபி இப்ராஹீம்[அலை]அவர்களின் மகன் இஸ்மாயீல்[அலை]அவர்களின் வழித்தோன்றலில்.

 கேள்வி:நபியவர்களுக்கு பால் புகட்டிய செவிலித்தாய் யார்?அவர்கள் எந்த கூட்டத்தை சார்ந்தவர்கள்? 
பதில்:அன்னை ஹலீமா ஸஃதியா[ரழி] அன்னார் பனூ ஸஃது கிளையை சார்ந்தவர்கள்.

 கேள்வி:நமது நபி[ஸல்]அவர்களால் கட்டப்பட்ட முதல் பள்ளி எது? 
பதில்:மஸ்ஜிது குபா.

 கேள்வி:மதீனாவிற்குள் வந்ததும் நபியவர்கள் யாருடைய வீட்டில் தங்கினார்கள்? 
பதில்:அபூஅய்யூபுல் அன்சாரி[ரழி]வீட்டில்.

 கேள்வி:நபியவர்கள் தவ்ரு குகையில் அபூபக்கருக்கு எவ்வாறு ஆறுதல் கூறினார்கள்? 
பதில்:”கவலைப்படாதே!நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்”. 

கேள்வி:நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் எத்தனை முறை ஹஜ் செய்தார்கள்? 
பதில்: ஒரு முறை.

 கேள்வி:நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்ட வருடம் எது? பதில்:ஹிஜ்ரி எட்டு.

 கேள்வி:நபி[ஸல்]அவர்களது ஒட்டகத்தின் பெயர் என்ன? 
பதில்:கஸ்வா.

கேள்வி:நபி[ஸல்]அவர்களுக்கு விஷம் வைத்த யூதப்பெண்ணின் பெயர் என்ன? 
பதில்:ஜைனப் பிந்தி அல்ஹாரிஸ்.

 கேள்வி:நபியவர்களோடு அன்னை கதீஜா[ரழி]அவர்கள் வாழ்ந்த காலம் எவ்வளவு? 
பதில்: 26 வருடங்கள்.

 கேள்வி:நமது நபியின் சகோதர சகோதரிகள் எத்தனை பேர்?
பதில்:யாரும் இல்லை.

 கேள்வி:நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை எங்கே இறந்தார்கள்? 
பதில்:மதீனா முனவ்வராவில்

No comments:

Post a Comment